Liight and Darkness
ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
Light and Darkness
The blaze of sunlight…Among the expanse of the sky..
Over the mountains, the wavy sea, the land, trees and the jungle…
The blaze of sunlight.. along the multiple rivers, aside their banks..
But Why? Why in the heart of humanity, an intense darkness?
The light is a boundless flow, it swirls, it swirls all around, its waves…
The light is a vast ocean, a grand scatter, spotless infinity
The light, in its fullness, pervades the entire world…
But why..why.. a lonely heart wallows in empty darkness, without a small light to shine upon..
How tragic!
The light is a nectar of honied flowers…
The light hailed by birds locks in embrace, the earth, water and the wind
And brims with delight through the entire world..
But..why this harmful darkness moves in a hapless heart?
The brook glitters in the light..
The tall hill erupts into a beautiful laughter
The black locks of hair of the clouds wander, gathering shine like gold…
After mastering all knowledge and the ultimate Truth, why this raging ennui in heart?
Original verse in Tamil by Subramania Bharathi
Translated to English by T Santhanam

Super👏
ReplyDeleteThank you Mathi
DeleteBeautiful! English translations will help such profound words reach more people. Looking forward to more such ones.
ReplyDeleteThank you Janu
DeleteWonderful translation. Keep it up
ReplyDeleteThank you Ram
DeleteA tough one to translate .
ReplyDeleteYou have done it well . Congratulations
This comment has been removed by the author.
DeleteThank you Ram. Your comments mean a lot to me
Delete